ETV Bharat / state

ஆத்தூர் அருகே பேருந்து விபத்து: 20 பேர் காயம்

author img

By

Published : Sep 1, 2021, 8:15 AM IST

நின்றுகொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 20 பேர் காயமடைந்தனர்.

bus accident
bus accident

சேலம்: ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த டாரஸ் லாரி மீது அரசு விரைவுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம் காட்டுக்கோட்டை அருகே சம்பேரி என்னுமிடத்தில் சேலத்திலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் டாரஸ் லாரியை நிறுத்தி ஓட்டுநர்கள் தூங்கியுள்ளனர்.

அப்போது சென்னையிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அரசு விரைவுப் பேருந்தில் பயணம்செய்த ஓட்டுநர் மாதேஸ்வரன், நடத்துநர் பழனிசாமி, ஒரு பெண் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த தலைவாசல் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காவல் துறையினர் விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தை அகற்றி போக்குவரத்தைச் சரிசெய்தனர். இந்த விபத்தால் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.